Sunday, July 31, 2011

30)கல்விக்கான ஒரு அமைதி இயக்கம்.

                                     


 அன்பு நண்பர்களே, 
       paramesdriver.blogspot.com !வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
                                                கல்வி உதவி



      நம்ம ஊராம் சத்தியமங்கலத்தில் 31-07-2011 இன்று கல்விப் பணிக்கான அமைதி இயக்கமாம் G.G.T. என்னும் தங்கத்தைப் போல் மினுமினுக்கும் குழு (அல்லது) பிரகாசிக்கும் குழுவின் இன்றைய ஆண்டின் இலக்கு என்னும் MILE STONE-2011- வின் கிராமப் பகுதியைச் சார்ந்த 25 மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் வழிகாட்டுதல் விழா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது.

         அனைவருக்கும் வாழ்வாதாரத்திற்கான பயனுள்ள கல்வி என்னும் இந்த சமூக வளர்ச்சிக்கான  நல்விழாவிற்கு 
   மரியாதைக்குரிய (1) திரு;பிரபுசாரி (HR-HEAD / C.T.S-COIMBATORE) மற்றும் (2) திரு;ஆனைக்கொம்பு ஸ்ரீராம் (ROTARY CLUB OF SATHY ) ஆகிய ஆன்றோர்கள் முன்னிலை வகிக்க,

       மரியாதைக்குரிய தலைமை ஆசிரியர் திரு;சாமியப்பன் அவர்கள்-அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி , சத்தி,
         மற்றும் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மரியாதைக்குரிய திரு; சங்கர் மற்றும்,
         தொட்டம்பாளையம் அரசு மேனிலைப்பள்ளி மரியாதைக்குரிய தலைமை ஆசிரியர் மற்றும்,
     பல கல்வியாளர்களும் ,சான்றோர்களும்,தொழில் நுட்ப வல்லுனர்களும் கலந்து கொண்டு GLITTERING GOLDEN TEAM-சமூகசேவையாளர்களைப் பாராட்டியும்,

      The Glittering Golden Team-Mile Stone-2011 - என்னும் இந்த ஆண்டு இலக்கான

     (1)    பொறியியல் கல்லூரி , 
     (2)  கலை & அறிவியல் கல்லூரி , மற்றும்    
     (3)  பள்ளிகளில் பயிலும் 

     கிராமப் பகுதி 25 மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கியும்,
      அவர்களுக்கான வழிகாட்டுதல்களுக்கான தகுந்த அறிவுரைகளை வழங்கியும் உரையாற்றி இவ்விழாவினைச் சிறப்பித்தனர். 

      சத்தியமங்கலப் பகுதியைச் சார்ந்த மற்றும்
     மலைப்பகுதியான ஆசனூர் பகுதியைச் சார்ந்த
     பொது மக்கள் கலந்து கொண்டு விழாவிற்குப் பெருமை சேர்த்தனர்.
    
     சாதி,மத,மொழி,இன,பாலியல் வேறுபாடின்றி  இந்த மனித சமூகத்திற்காகப் பயனுள்ள சமூக சேவை செய்யும்   G.G.T.தன்னார்வலர்களை நாமும் மனதாரப் பாராட்டுவோம்.
    paramesdriver.blogspot.com `நன்றி!

Sunday, July 24, 2011

29) தூக்கம் போச்சு!

       
          தூக்கம் வராமைக்குக் காரணங்களும்-தீர்வுகளும்.



         பரபரப்பான வாழ்க்கை முறையில் சிக்கி தவிக்கும் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாகும் போது சில அறிகுறிகளை காட்டுகிறது. அதில் ஒன்று தான் தூக்கமின்மை. 
         . ‘டென்ஷன் காரணமாக எந்த வயதிலும் தூக்கமின்மை பிரச்னை தாக்குகிறது. தூக்கமே வராமல் இருத்தல், ஆழமான தூக்கமின்றி இடையில் பலமுறை எழுவது, தூக்கத்தில் இருந்து விழித்த பின் மீண்டும் தூக்கம் வர அதிக நேரம் பிடித்தல்.. என பலருக்கு நிம்மதியான தூக்கம் என்பது கனவாகி வருகிறது.

அடிக்கடியோ அல்லது நீண்ட நாட்களுக்கோ இத்தொல்லை இருக்கிறது. வேலை காரணமாக மன அழுத்தம், உடல் நலம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றால் தூக்கம் பறி போய் விடுகிறது.
      மனச்சோர்வு, மூளையைத் தூண்டும் மருந்துகள், மது, புதிய சூழல், நீண்ட நாட்களுக்கு தூக்க மாத்திரை உட்கொள்வது, நாள்பட்ட நோய் போன்ற காரணங்களாலும் வரலாம். 
      இப்பிரச்னையால் நாள் முழுவதும் பாழாகி போகும். அதுவே டென்ஷனை உருவாக்கும். மூளையிலும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும்.

     தூக்கமின்மையால் தவிப்பவர்கள் தாங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றியிருப்பவர்களையும் டென்ஷனாக்கி விடுவார்கள்.
     இதற்கு சரியான சிகிச்சை அவசியம். உடல், மனம், சூழல் இந்த மூன்றில் எதில் பிரச்னை இருந்தாலும் தூக்கமின்மை வரலாம். 
    உடலில் என்றால் அதற்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
     மனம் என்றால் மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி தீர்வு காண வேண்டும். 
     சூழலை மாற்றுவதன் மூலமும் தூக்கத்தை திரும்ப பெற முடியும்.
 
         நல்ல தூக்கத்துக்கு சில வழிமுறைகளை கையாளலாம்.

      தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கச் செல்வது அவசியம். மதியம் மற்றும் மாலை நேரங்களில் குட்டித் தூக்கம் வேண்டவே வேண்டாம். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சின்ன வாக்கிங், குட்டிக் குளியல் எடுக்கலாம்.
  இதனால் மனம், உடல் ரிலாக்ஸ் ஆகும். தூக்கமும் நன்றாக வரும். தூங்க செல்லும் போது தளர்வான உடை, முடியை இறுக்கமின்றி வைத்து கொள்ளலாம். 
     அதோடு மனதில் உள்ள கவலைகளுக்கு குட்பை சொல்வது அவசியம்.படுக்கையில் இருந்து கொண்டு அலுவலக வேலைகளை செய்ய வேண்டாம். 
     தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை வைத்திருப்பது ஒரு டெக்னிக்.

        படுக்கும் முன் மது, புகையிலை, பாக்கு போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவது மிகமிகத் தவறு. 
       சூடான பால் ஒரு டம்ளர் குடிப்பது நல்லது.
படுக்கை அறை மித வெளிச்சத்துடன் இருக்க வேண்டும்.
      இரவு 1 மணி வரை கம்ப்யூட்டர், செல்போனே கதியென்று கிடக்கும் பழக்கத்தை மாற்றுவது நல்லது. 
     வீட்டில் சின்ன சின்ன பிரச்னைகள் இருந்தால் மனம் விட்டு பேசுவதன் மூலம் சூழலை இனிதாக்கிக் கொள்ளலாம்.

       ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுவது, தியானம் நல்ல உறக்கத்துக்கு வழிவகுக்கும். இவ்வளவு முன்னேற்பாடுகளுக்கு பின்னரும் தூக்கம் வராமல் புரள நேர்ந்தால் கஷ்டப்பட்டு தூங்க முயற்சிக்க வேண்டாம். 
     தூக்கம் வரும் வரை காத்திருக்கவும். எழும் போது வழக்கமான நேரத்தில் எழுந்து விடவும். 
      எந்த முயற்சியும் பலனளிக்காமல் போய் தூக்கமே வரவில்லையென்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுப்பது அவசியம்‘

                     RECIPE = மருந்து முறை

லெட்டூஸ் சாலட்: லெட்டூஸ் கீரையை அரிந்து கொள்ளவும். வெள்ளரி மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றையும் சாலடுக்கு தகுந்தாற் போல் வெட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சை ஜூஸ் சிறிதளவு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சாலட் தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலம் மன இறுக்கம் தளர்ந்து இனிய தூக்கம் கிடைக்கும்.
புரூட் ஹனி: திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள் என உங்களுக்கு பிடித்த பழவகைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு போதுமான இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி கிடைக்கிறது.
      இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பகல் நேரங்களில் சரியாக சாப்பிடாமல் இருந்திருந்தால் கூட இந்த ஹனி புரூட் மிக்ஸ் மூலம் தேவையான சக்தியை பெறலாம்.

ஓட்ஸ் மீல்: அரை கப் பால் எடுத்து சுண்ட காய்ச்சவும். பால் நன்கு கொதித்ததும், அதில் கொஞ்சம் ஓட்ஸ் சேர்க்கவும். ஓட்ஸ் வெந்து கொஞ்சம் கெட்டிப் பதத்துக்கு வரும். அதில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வெட்டிப் போட்டு தேன் சேர்த்து சாப்பிடவும். எளிதில் ஜீரணமாகி நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
 
     மின்ட் சப்பாத்தி: வழக்கமான சப்பாத்திக்கு பதிலாக புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து சப்பாத்தி தயாரிக்கலாம்.
     இது நல்ல மணத்துடன், புதிய சுவையோடு இருக்கும். கோதுமை மாவில் இருந்து நார்ச்சத்து மற்றும் புதினா, கொத்தமல்லியில் இருந்து உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்.

          DIET = வழக்கமாக சாப்பிட வேண்டியவை

             பலருக்கும் அலுவலக டென்ஷனை வீடுவரை இழுத்து வருவதே தூக்கத்துக்கு எதிரியாக மாறுகிறது. அலுவலகத்தையும் வீட்டுச் சூழலையும் தனித்தன்மையுடன் சமாளிக்க தெரிந்தவர்களுக்கு இந்த தொல்லை இருப்பதில்லை. 
       தூக்கத்தில் சிறிய பிரச்னை இருந்தால், உணவின் மூலம் சரி செய்து கொள்ளலாம். 
        இரவு படுக்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். 
        நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். பிரவுன் ரைஸ் அரிசியை வேக வைத்து உணவுடன் 50 கிராம் சேர்த்துக் கொள்ளலாம்.
        வைட்டமின் பி சத்துள்ள பருப்பு வகைகள் நரம்புகள் ரிலாக்ஸ் ஆக உதவும். தூங்குவதற்கு முன்பு சூடான பால் மற்றும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். 
        தேன், ஓட்ஸ் மீல்ஸ், முழு கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டி இரவு உணவுக்கு ஏற்றது. 
         தேன் சாப்பிடுவதால் மன இறுக்கம் தளர்வடையும். அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்க்கவும். 
           காபி கண்டிப்பாக வேண்டாம். தூக்க மாத்திரை சாப்பிடும் வழக்கத்தை கண்டிப்பாக விட்டு விட வேண்டும்.
         இரவில் கீரை வகைகள் மற்றும் அதிக காரமான உணவுகளை தவிர்ப்பது தொல்லை இல்லா தூக்கத்துக்கு வழிவகுக்கும் .

                     பாட்டி வைத்தியம்

        வேப்பிலையை வறுத்து தலைக்கு வைத்து தூங்கினால் நன்றாக தூக்கம் வரும்.

         இரவில் வயிற்றில் ஏற்படும் உப்புசத்தால் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உடனடியாக வெந்தயக்கீரை, நிலவாரை இலை இரண்டையும் சம அளவில் எடுத்து அதில் ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.

               வெண்தாமரை இலையுடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

            அதிகாலையில் கொஞ்சம் வல்லாரைக் கீரையை மென்று தின்ன வேண்டும். அடுத்து அரை மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. இதன் மூலம் மனம் சார்ந்த நோய்கள் குணமாகும். இரவில் நன்றாக தூங்கலாம்.

           லெட்டூஸ் கீரையை பொடியாக நறுக்கி தயிர் மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

                ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

           முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிடலாம்.

           மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் ஆழ்ந்த தூக்கம் நிச்சயம்.

             மருதாணி பூக்களை தலையணையின் கீழே வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

             மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்.

28)கண்கள்- நோய் பாதுகாக்க

         
                  கண்கள் = கவனியுங்கள்
 


          கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன.
      இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால்கூட கண்நோய் வருகிறது.
      இதனால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். 
       தொடர்ந்து டிவி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும். கண்களில் வலி இருக்கும். இமைகள் கனமாக இருக்கும். தலைவலியும் வரும்.

         மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து டிவி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும்.
      இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும். கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை    ஏற்படலாம்.     

          சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும்.

     அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும்.

       ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும். 
       மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம்.
       இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
        இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

        வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.

       எனவே கண்ணில் சிறிய பிரச்சினை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். 
       சுயமருத்துவம் செய்வது தவறாகும். 

        இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கம்ப்யூட்டர் திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், 
     கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும்.

        இதில் இரண்டு வகை உண்டு.

    கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. 
     இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும். 
    இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். 
      உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கலாம் .

          பாதுகாப்பு முறை: குறிப்பிட்ட இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளை துவக்கத்தில் கண்டறிந்து சரி செய்யலாம். 

       நாள்பட்ட சர்க்கரை மற்றும் மிகை ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைப்பது அவசியம்.
       கண்ணில் ஏற்படும் நோய் தொற்று அறிகுறிகளை உடனே அறிவதும் முக்கியம்.
       திடீர் பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை, கண்களில் ஒளி வீசுதல், கறுப்புப் புள்ளிகளின் தோற்றம் போன்றவை கண் அழுத்த நோய் அல்லது மூளை பாதிப்பின் விளைவாக இருக்க வாய்ப்புள்ளது.

    சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணியலாம்.

     வைட்டமின் ‘ஏ, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
     சரியான கண்ணாடியை அணிவதன் மூலம் பார்வை திறனை சரி செய்து கொள்ளலாம். 
     குறைந்த வெளிச்சத்தில் படிப்பதை தவிர்க்கவும். கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது.
      கண்களை மூடிய நிலையில் 10 நிமிடத்துக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.

       சிவந்த கண்கள் பிரச்சினை உள்ளவர்கள் வெந்நீரில் துணியை நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்கலாம். கண் நோய் ஏற்பட்டால் கைகளை அடிக்கடி கழுவவும். 

      வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உபயோகிக்கவும். கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
       தலையணை உறையை தினமும் மாற்றவும். இது போன்ற நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கண் நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

         RECIPE=மருந்து முறை

           சிறுகீரை கூட்டு:       

      பாசிப்பருப்பு 50 கிராம் அளவுக்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும். சிறுகீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். 
     சின்ன வெங்காயம் ஒரு கப், பூண்டு ஐந்து பல், புளிக்கரைசல் சிறிதளவு எடுத்து கொள்ளவும். 
       வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, வறமிளகாய் சேர்த்து தாளிக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். 
       பின்னர் சிறுகீரை சேர்த்து வெந்த பின் பாசிப்பருப்பு வேக வைத்தது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

மிக்சட் புரூட் ஜூஸ்:

     ஆப்பிள் அரை கப், வாழைப்பழம் அரை கப், கருப்பு திராட்சை அரை கப், முலாம்பழம் அரை கப். பழங்களை மிக்சியில் அடித்து வடிகட்டிக் கொள்ளவும்.
     மீண்டும் மிக்சியில் சர்க்கரையை பொடியாக்கி பின்னர் பால் மற்றும் பழச்சாறு சேர்த்து அடித்துக் கொள்ளவும். 
      இந்த மிக்சட் புரூட் ஜூசில் போதுமான அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது.

குச்சிக் கிழங்கு வடை: 

      குச்சிக் கிழங்கை தோல் சீவி கிரைண்டரில் மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.
     கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பொட்டுக் கடலையைப் பொடியாக்கிக் கொள்ளவும். 
      சீரகம், சோம்பு, வறமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லித்  தழை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
        ஊற வைத்த பருப்பு வகைகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் பொட்டுக் கடலைத் தூள் மற்றும் சீரகம் உள்ளிட்ட பொருட்களைக் கலந்து, அரைத்து வைத்த குச்சிக் கிழங்கு மாவையும் சேர்த்து வடை பதத்துக்கு பிசையவும். 
     தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். எண்ணெய் குறைவாக சேர்க்கவும்.

           DIET= வழக்கமாக சாப்பிட வேண்டியவை

         வழக்கமாக கண் பிரச்னையானது தலைவலி, ஒற்றைத் தலைவலி, கிருமித் தொற்று ஆகியவற்றால் வரும்  உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள், வயதானவர்கள், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு  இதற்கான வாய்ப்பு அதிகம். 

      இவர்கள் தூசு, புகை உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். அதிக வெளிச்சம், அதிக இருட்டு தவிர்க்கவும். 
       நீண்ட நாள் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சொட்டு மருந்து உபயோகிக்கலாம். 
       கண்நோய் தாக்குதல் உள்ள சமயத்தில் வைட்டமின் ஏ சத்து உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.

        வைட்டமின் ஏ சத்து அனைத்து வகையான பச்சைக் கீரைகள், வாழைப்பழம், மாம்பழம், கேரட், காலிபிளவர், முட்டைக்கோஸ், மீன் மாத்திரை, பழ வகைகளிலும் உள்ளது. 

       தினமும் கட்டாயம் உணவில் கீரை இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வகையான பழச்சாறு அருந்த வேண்டும். மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். கொழுப்பு உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.

       அசைவம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. தினமும் அரை மணி நேரம் வாக்கிங் அவசியம். 

        உணவில் சாதத்தின் அளவை விட காய்கறிகளின் அளவு அதிகம்இருக்க வேண்டும்.
        டீ, காபிக்கு பதிலாக பால் சாப்பிடலாம். இந்த உணவு முறையை கடைபிடித்தால் கண் நோய்கள் உடனடியாக சரியாகிவிடும்.

      பாட்டி வைத்தியம்

        கண்ணில் நீர் வடிதல் பிரச்னை உள்ளவர்கள் வேளைக்கீரை, இஞ்சி, மிளகு, வெல்லம் அனைத்தையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் 15 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

       வேப்பிலை, சுக்கு, இந்துப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சூடுபடுத்தி கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்வலி மற்றும் கண் அரிப்பு குணமாகும்.

        பூண்டு, சீரகம், இஞ்சி ஒவ்வொன்றிலும் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து இடித்து பனைவெல்லம் சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். கண்ணில் நீர்வடிதல் பிரச் னைக்கும் தீர்வு காணலாம்.

          உடல் சூட்டின் காரணமாக கண்களில் பிரச்னை ஏற்படுபவர்கள் வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும்.

               வில்வ இலையைப் பொடி செய்து வெந்தயம் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

        இரவில் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் கண்ணில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

          லெட்டூஸ் கீரையை அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட்டால் கண் நோய் குணமாகும்.

             முருங்கைக் கீரையை நீர் சேர்க்காமல் அவித்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.

         மருதாணி இலையை அரைத்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்களில் நீர்வடிவது நிற்கும்.

Tuesday, July 19, 2011

27) NHM - WRITER -பயன்படுத்த எளிது.



.
அன்பு நண்பர்களே,
                       paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.

     NHM Writer -மென்பொருள் வைத்து  கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது எளிது 
   தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
           NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil ,Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
      Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.  
      Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
     

  1. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  2. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.

NHM Writer என்ற மென்பொருளை nhm.writer  இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
1)= (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
2)=  (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற     பட்டனை கிளிக் செய்யவும்.
 
3)=  (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
4)=  (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
5)=   (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
6 )= (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்
இப்போது  மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.


         paramesdriver.blogspot.com /  Sathy & Thalavadi )
         
           NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?
    NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar -ன் வலது மூலையில் BELL அதாவது மணி- போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் 
       NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்
     
      தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?
     முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன (BELL)- மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.  
     அதில் நீங்கள் விரும்பும் தமிழ் விசைப் பலகையை தேர்வு செய்யவும்.


              மேலும் எளிதாக  தேர்வு செய்ய
       
        1) TAMIL -99             தேர்வு செய்ய Alt Key  +1அழுத்தவும்,
        2)  PHONETIC -         தேர்வு  செய்ய Alt Key  +2 அழுத்தவும்,
        3)TYPEWRITER -      தேர்வு  செய்ய Alt Key  +3  அழுத்தவும்,
        4)  BAMINI -             தேர்வு  செய்ய  Alt Key  +4 அழுத்தவும்,
    5)  INSCRIPT -    தேர்வு செய்ய  Alt Key +5 அழுத்தவும்.
  
            இவ்வாறு விரும்பிய விசைப் பலகையைத் தேர்வு செய்த பின்னர்  நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.
    
      தமிழ் மொழி தட்டச்சு செய்வதிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key + 0 என்ற எண்ணைச்  சேர்த்து அழுத்தினால் போதும்.இவ்வாறாக தமிழ் மற்றும் ஆங்கிலம் என மாறி, மாறி தட்டச்சு செய்யலாம்.
  
         செட்டிங்கை + மாற்ற! 

      NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
       அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும்
         அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்ணை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.
   
    தமிழ் ,99 விசைப் பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

        முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் 
                    1.   தமிழ்,99 விசைப் பலகை, 
          2.  தமிங்கில விசைப் பலகை,
          3.  பாமினி விசைப் பலகை, 
                     4.  தட்டச்சு பலகை 
      என அனைத்து முறைகளின்  விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது.
       அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு (Menu) தெரியும்.
   
     அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்
    நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.


  1)  சிலர் TYPEWRITING முறை அதாவது Bamini தட்டச்சு முறை பற்றி கேட்கின்றனர்.காரணம் பழையமுறை அதிகம் புழக்கத்தில் உள்ளது.பெரும்பாலானவர்கள் பழகிக்கொண்டது. ஆனால் ''தமிழ் '99'' மிக எளிதானது.இந்த ''தமிழ்'99'' முறை -புதியமுறை இன்னும்  அதிகம் பயனுக்கு வரவில்லை.அதே சமயம் தமிழக அரசு பரிந்துரை செய்வது இந்த தமிழ்'99 முறைதான்.(நான் பயன்படுத்துவது தமிழ்'99 முறைதான்.)
  
   2) யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு முறையில் அதாவது  பாமினி  முறையில் தட்டச்சு செய்வது? என்று கேட்பவர்களுக்கு
      எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சினையாகக் கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களைத் தான்.        
         அவற்றைத் தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது
       Key Preview என்ற திரையைப் பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
    அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
  
     உதாரணமாக    நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்குஎன்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்தஎன்ற தமிழ் எழுத்தைய்என்றோ, அல்லதுயாஎன்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக  திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
     நீங்கள் இதைப் பார்த்து, எந்த ஆங்கில எழுத்தைத் தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்
 மேலும் தமிழ் தட்டச்சுமுறை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள எனது தமிழ் -99 தட்டச்சு முறை மற்றும் தமிழில் தட்டச்சு முறை ஒரு ஒப்பீடு என்னும் முந்தைய பதிவுகளைப் பார்க்கவும்.
  paramesdriver.blogspot.com Sathy & Thalavadi