Thursday, July 14, 2011

25)அனைவருக்கும் கல்வி இயக்கம்.

       

அன்பு நண்பர்களே,
      paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.

      பெண் குழந்தைகளுக்கான இலவசக் கல்வி
      KGPV-உண்டு உறைவிடப் பள்ளி  ( பெண் குழந்தைகள் மட்டும் )
      தொட்ட காஜனூர் - தாளவாடி ( டிவைன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி அருகில்) -சத்தியமங்கலம் வட்டம் - ஈரோடு மாவட்டம்.



                
           அனைவருக்கும் கல்வி இயக்கம்-ஈரோடு மாவட்டம் சார்பாக அனைவரும் கல்வி கற்க வேண்டும்.குறிப்பாக பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் .அனைவரும் முன்னேற்றம் அடைய வேண்டும். என்ற சீரிய நோக்கில்,

       பள்ளி செல்லா இடைநின்ற 10வயது முதல் 14 வயது வரை உள்ள  பெண்குழந்தைகளுக்கான இலவசக் கல்வி

          K.G.P.V. அதாவது ''கஸ்தூரிபா காந்தி பால்யா வித்யாலயா'' உண்டு       உறைவிடப் பள்ளி.

      தாளவாடியில்  இந்த வருடம் ஆரம்பிக்கப் பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

       இந்தப் பள்ளியில் சாதி,மதம் ,இனம்,மொழி வேறுபாடின்றி ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை இடையில் நின்ற பெண்குழந்தைகளுக்கு         


        பட்டப்படிப்புடன் கல்வியியல் படிப்பு முடித்த அனுபவமிக்க பெண் ஆசிரியைகளால் கீழ்கண்டவாறு கற்பிக்கப்படுகின்றன.
 
      1) கல்வி

      2)கம்ப்யூட்டர்

      3)கைத்தொழில்

      4)இசை

     5)கராத்தே

       6)யோகா

     7)நடனம்,  ஆகியன

      இலவசமாகக் கற்றுக்கொடுக்கப் படுகின்றன.

     8) இப்பள்ளியில் சேரும் மாணவியர் ஒவ்வொருவருக்கும் மாதாமாதம் அஞ்சலக சேமிப்பில்  (ரூ;50/-) ரூபாய் ஐம்பது வீதம் சேமிப்பாகப் போடப்படுகிறது.

    9)இலவச இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது.
   
     10)மாதந்தோறும் பெண் டாக்டர்( M.D.) அவர்களைக் கொண்டு  இலவச மருத்துவப் பரிசோதனையும் அனைத்து பெண்குழந்தைகளுக்கும் செய்யப்படுகிறது.

     11) இலவசச்சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்படுகின்றன.

      12)தங்கும் இடம்(பள்ளி) பாதுகாப்பானது.
     
       13) சாப்பாடு சன்ன ரக அரிசி மற்றும் சத்துள்ள காய்கறிகள்,கீரைகள்,முட்டை , ஹார்லிக்ஸ்,பூஸ்ட், பட்டாணி, சுண்டல்,என சத்துள்ள உணவுகளாக வழங்கப்படுகின்றன.

      இவையனைத்தும் பத்து வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட ஒன்று முதல் ஏழாம் வகுப்புவரை படிக்க இயலாமல் இடையில் நின்ற பெண்குழந்தைகளுக்கு மட்டும்.

       இந்தப் பள்ளி மத்திய மற்றும் மாநில அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நிதியில் இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.

      படிக்க இயலாமல் தவறவிட்ட பெண்குழந்தைகள் இவ் வாய்ப்பினை நழுவ விடாதீர்.இந்த வாய்ப்பினை அனைவரும் அறியச் செய்வீர்.

      paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi

No comments:

Post a Comment