Friday, September 23, 2011

அவல் பிரியாணி


தேவையானவை:

அவல் - 200 கிராம்
அவரவர்க்கு பிடித்த காய்களும் போட்டுக் கொள்ளலாம். பொடியாகவோ, மெல்லிய நீள துண்டுகளாகவோ, நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பற்கள்
பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு வாசனைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு


செய்முறை:

அவலை 2 முறை நன்கு கழுவி, நன்கு வடியவிட்டு வைக்கவும். இருமுறை அலம்பும் போதும் தண்ணீர் ஊற்றுவதால் அதிலேயே ஊறி தண்ணீரை உறிஞ்சுகொள்ளும். தனியாக நீரூற்றி ஊறவக்க்த்தேவை இல்லை. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்த உடனேயே இஞ்சி, பூண்டு விழுது போட்டுவிட்டு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும். வெங்காயம் சிவக்க வதங்கியபின் காய்களுடன், உப்பு போட்டு பாதி வதங்கியபின் அவலையும் போட்டு நன்கு வதக்கவும்.

அடுப்பை சிம்மில் எரியவிடவும். தேவை எனில் பிரட்டை நெய்யில் பொரித்தும் போடலாம். அவல் பிரியாணியை எளிதில் செய்து விடலாம். மேலே மல்லி இலை, புதினா இலைகளை போட்டு சாப்பிடவும். சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment