Monday, September 19, 2011

பள்ளிக்கூடத் தேர்தல்-Prof.N.Mani

        அன்பு நண்பர்களே,வணக்கம்.
                   

                பேராசிரியர்.நா.மணி அவர்களின்                                                                      படைப்பான '' பள்ளிக்கூடத்தேர்தல்'' என்ற கள ஆய்வுப்புத்தகம் 

        அனைத்து ஆசிரியர்கள்,பேராசிரியர்கள்,வருங்கால ஆசிரியர்கள்,மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் படித்து சிந்தனை தெளிவு பெற வேண்டிய அவசியமாகும்.

       அந்தப் புத்தகத்தில்  அரசால் வழங்கப்படுவது நல்லாசிரியர் விருதா? வல்லாசிரியர் விருதா? என்ற வரி சிந்திக்க வேண்டியதாகும்.

           அதுமட்டுமல்ல நல்லாசிரியர்களை மாணவர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.என்றும் ஆசிரியருக்கான இலக்கணம் பற்றியும் தெளிவாக வலியுறுத்தி உள்ளார்.
வெளியீடு; பாரதி புத்தகாலயம்-விலை ரூபாய் 20மட்டும்.
      
அதோடு 
   (1) எனக்குரிய இடம் எங்கே? (கல்விக்கூடச்சிந்தனைகள் ) ஆசிரியர்; ச.மாடசாமி  இந்தப்புத்தகம்.... கல்விக்கூட அனுபவப்பகிர்வு,கனவுகள் மற்றும் சந்தோசங்களின் பதிவு. இது அருவிமாலை பதிப்பு( மதுரை& சென்னை)
   (2)எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? தமிழில்;ஜே.ஷாஜஹான் (ஏழைகளுக்கு எதிராக உள்ள கல்வி அமைப்பு குறித்த கோபமான விமர்சனம்)வெளியீடு;வாசல் பதிப்பகம்-மதுரை
(3) உலகம் சுற்றலாம் வாங்க. பேரா.சோ.மோகனா. (இது உலக நாடுகளை சுற்றிப்பார்க்க அழைத்துச்செல்கிறது.) விற்பனை-பாரதி புத்தகாலயம் .
(4) கார்-ஆ பேருந்தா-பேரா.நா,மணி.(சுற்றுச்சூழல் சிந்தனைக்கான சிறந்த புத்தகம் இது.விலை;ரூ=ஐந்துமட்டும்.வெளியீடு மற்றும் விற்பனை பாரதி புத்தகாலயம்-சென்னை.
ஆகிய புத்தகங்களும் அனைத்து கல்வியாளர்களும் படிக்க வேண்டியவைகள்.
   paramesdriver.blogspot.com // sathy & thalavadi.

No comments:

Post a Comment