Tuesday, December 18, 2012

கணினி ‘ – ஆணா… பெண்ணா..?

மரியாதைக்குரிய நண்பர்களே,
              வணக்கம். 
    இதென்ன சோதனைங்க? நீங்கள்தான் தீர்வு சொல்லுங்களேன்!.



        கணினி ‘ – ஆணாபெண்ணா..?
          
 
      ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..
எனவே, மாணவர்கள் அனைவரையும் அழைத்து மாணவர்கள்  தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்……….
 
      மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள் 

           அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ
1)
அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3)
நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4)
எந்த நேரத்துல புகையும்…. எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
5)
நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தனர்.               
        அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ
1)
எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..
2)
எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..
3)
நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..
4)
பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவைஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..
5)
அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!
Top of Form
Bottom of Form

Sunday, November 4, 2012

அன்பு நண்பர்களே,வணக்கம். இது நம்ம ஊர் சமூக சேவைங்க!



















Wednesday, October 31, 2012

KARATTUR-SATHY-சொர்க்க பூமி மேம்பாடு-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
            பரமேஸ்டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் கிராமத்திற்கு சொந்தமான மயானம் என்னும் சொர்க்கபூமி புதர் மண்டி மிக மோசமான அவலநிலையில் இருக்கிறது.




         நீண்டநாள் முயற்சிக்குப்பிறகு தற்போதுதான் கரட்டூர் பொதுமக்கள் வழிகாட்டிதலில் மகாசக்தி ஆண்கள் குழு செயல்பட்டு அதன் முதல் கட்டமாக மரக்கன்றுகள் நடுதல்,அமரர்களை அடக்கம் செய்ய மண் ஓட்டி சமதளத்தை உயர்த்துதல்,மூலிகைப்பண்ணை,மற்றும்பூங்கா அமைத்து பராமரித்தல்,தண்ணீர்த்தொட்டி அமைத்தல்,உள்புற சாலையை தற்காலிகமாக புதுப்பித்தல்,மின்விளக்கு அமைத்தல்,என துவங்கப்பட்டுள்ளது.





















வாருங்கள் பொதுமக்களுக்காக சமூக சேவை செய்யும் இந்த இளைஞர்களை வாழ்த்துவோம்.வரவேற்போம்.

Friday, October 5, 2012

கொங்குத் தென்றல்: தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012...

கொங்குத் தென்றல்: தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012...: மரியாதைக்குரிய நண்பர்களே,             வணக்கம். கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கணித மேதை ராமானுஜருக்கு சிறப்பளி...

கொங்குத் தென்றல்: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்-தேசியக் கருத்தரங்கம்-2...

கொங்குத் தென்றல்: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்-தேசியக் கருத்தரங்கம்-2...: மரியாதைக்குரிய நண்பர்களே,        வணக்கம்.                  சென்னை தரமணி-மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகத்தில் அமைந்துள்ள உலகத்தமிழாராய்...

Sunday, August 19, 2012

Drivers India - ஓட்டுனர்களுக்கான வலைப்பக்கம்

மரியாதைக்குரிய நண்பர்களே,
                      இனிய வணக்கம். 
                ஓட்டுனர்களாகிய நமக்கு தொழில்ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகி அதன் காரணமாக சமூகத்தின் பார்வையிலும் கொடூரமானவர்களாக காணப்பட்டு வருகிறோம். அத்துடன் பிறர் செய்யும் தவறுகளுக்கு ஆள்பலம்,பணபலம்,சட்ட யுக்தி என பல காரணங்களை வைத்து கூலிக்கு வேலை செய்யும் நாம் எளிதாக தண்டிக்கப்பட்டும், கேவலப்பட்டும் வருகிறோம்.சமூகத்தின் அந்த தவறான பார்வையை அகற்றி நாமும் சராசரி மனிதர்களே,சூழ்நிலை நம்மை குற்றவாளியாக்குகிறது. என்பது போன்ற பல பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் செய்து தீர்வு காண நாமும் தெளிவு பெற,ஓட்டுனருக்கென்றே தனி வலைப்பக்கம் driversindia.blogspot.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் ஓட்டுனரே! ஓட்டுனர்கள் அனைவரும் முறைப்படி சங்கம் கட்சிசார்பற்ற முறையில் அமைத்து நமக்காக நமது நன்மைக்காக செயலாற்றுவோம்.பொதுச்சேவையும் நம்மால் இயன்ற அளவு செய்வோம்.சமூகத்திடம் நல்ல உறவு வைத்துக்கொள்வோம். எனவே ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாகி நல்ல விசயங்களை,சமூகத்திடன் பகிர்ந்து நம்மையும் பாதுகாத்து,நம்ம குடும்பத்தையும் பாதுகாத்து ஓட்டுனர் பணி ஒப்பற்ற உயர்வான பணி! கலையும் கூட! என்பதை உணர்வோம். உணரச்செய்வோம்.என 
        PARAMES DRIVER - THALAVADY - ERODE

Monday, July 30, 2012

புதிய தலைமுறை தொலைக்காட்சி: ஆ.ராசாவுடன் சிறப்பு நேர்காணல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி: ஆ.ராசாவுடன் சிறப்பு நேர்காணல்: ஸ்பெக்டரம் வழக்கில் சிக்கியதற்கான காரணம், இதுகுறித்து தமது கட்சியின் நிலைப்பாடு, 15 மாத சிறைவாசம், தோழமைக் கட்சி துணையாக வந்ததா என்பன போன்ற...

Tuesday, March 27, 2012

அன்பு நண்பர்களே,வணக்கம்.


இது ஒரு புத்தகத் திருவிழா.கோபி மாநகரில் நடைபெற்ற இந்த புத்தகத்திருவிழா விகடன் பிரசுரம் நடத்தியது.













         



Wednesday, March 7, 2012

உலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்


அன்பு நண்பர்களே,
     PARAMES DRIVER-வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..08-03-2012  உலக மகளிர் தினம்.
உலக மகளிர் தின விழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்-எளையம்பாளையத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கல்லூரி தாளாளர் திருமிகு.பேராசிரியர்.டாக்டர்.மு.கருணாநிதி B.Pharm.,M.S.,Ph.D.,அவர்களதுமிகச்சிறப்பாக ஆற்றிவரும் மகளிருக்கான கல்விப்பணிக்காக சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும்,வணக்கங்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.






              மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.

             முத‌லி‌ல் அனை‌த்து மக‌ளி‌ரு‌க்கு‌ம்  ''கொங்கு தென்றல்'' சா‌ர்‌பி‌ல் மக‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்துகளை  தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.

         உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

           18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.

               இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. 

       இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது.
             எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌  த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது. (அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.

            இதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.

        அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

     இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய சாரா‌ம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா... ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது.

            இத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.

         அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ஒரு ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்புதா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் மக‌ளி‌ர் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் களை க‌ட்டியு‌ள்ளன. 

நம்மை ஈன்ற தாயும் ஒரு பெண்.நமது வாழ்க்கைத்துணையும் ஒரு பெண்.நமது வாரிசும் ஒரு பெண்.என்ற சிந்தனையோடு நாமும் பெண்ணுக்கு சம உரிமை கொடுத்து பெண்ணைப் படிக்க வைப்போம்.பெண்ணைப்போற்றுவோம்.பாரதத்தை வலிமையாக்குவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். வாழ்க பெண்ணியம்! வளர்க பாரதம்!!
   PARAMESDRIVER -TAMILNADU SCIENCE FORUM - THALAVADY - ERODE DISTRICT.