• YOU CAN'T GET JUSTICE WHERE LAW IS BEING DENIED.
      Thindal Subramanian Perumal -ஆல் · சுமார் 6 மாதங்களுக்கு முன்
      I AM SURE THAT YOU CAN'T GET JUSTICE WHERE THE LAW IS BEING DENIED. EACH AND EVERY PLACE THERE IS CHEATING, FRAUD, CORRUPTION. COURT IS NOT EXCEPTION. THE COURT MUST FUNCTION AS PER LAW UNLESS YOU CAN
      431
    • நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் .
      Thindal Subramanian Perumal -ஆல் · சுமார் 7 மாதங்களுக்கு முன்
      நீதிமன்றத்தில் வாதட கல்வித் தகுதி தேவை இல்லை. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம். சட்டம் தெரிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். இப்போது சட்டப் புத்தகங்கள் தமிழிலேயே  கிடைகிறது. திரு நடராசன் M.A. M.Com
      23912
       
       
      ஆலோசனைகள்.
      1. நாமக்கல்லில் நடக்க உள்ள கூட்டத்தை இரண்டு நாட்களுக்கு நடத்தலாம்.
      2. நாமக்கல்லில் நடக்க உள்ள கூட்டத்தில் அடையாள அட்டை அளிக்கும் இடத்தில் இயக்குனர் ஒருவராவது இருக்க வேண்டும். யார் யார் வருகிறார்கள் ? என்பதை அறிய / கண்காணிக்க வேண்டும்.
      3. பெண்களுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்க வேண்டும்.
      4. பெண்களுக்கு வசதி செய்ய வேண்டும்.
      5. வருகை தரும் நபர்கள் அனைவரின் கருத்துக்களையும் எழுத்து மூலமாகப் பெற வேண்டும். அதனை மேடையில் வாசிக்க வேண்டும்.
      6. வருகை தந்தவர்களின் ஆலோசனை மற்றும் கருத்துப் பதிவு ஏடு வைக்க வேண்டும்.
      7. மண்டபத்தில் சட்டங்கள் எழுதி வைக்கப்பட வேண்டும்.
      உதாரணமாக......
      * சட்டப்படி உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்.
      * நீதிமன்றத்தில் அமர உங்களுக்கு சட்டப்படியான உரிமை உள்ளது.
      * ஒரு குற்றம் தொடர்ந்து செய்யப்படும் போது அதன் காலவரம்பு ஒவ்வொரு முறையும் புதியதாகத் தொடங்குகிறது.
      * ஏற்கத் தகாத வழக்கை ஏற்க நீதிபதிகளுக்கு அதிகார வரம்பு கிடையாது.
      * கேட்கப் படுவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
      * எந்த சட்டப்படி உங்களுக்கு நீதி வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
      * நீதிபதிகள் மீது புகார் அளிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.
      * நீதிபதிகளின் செயல்பாடு குறித்து உள்ளது உள்ளபடி விமர்சிப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.
      * சட்டத்தின் ஆட்சி வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்போம்.
      * நாம் அரசியல் சாசனத்தை மதித்து ஏற்று அதன்படி செயல்படுவோம் என உறுதி மொழி ஏற்போம்.
      * அரசியல் சாசனம் நீங்கள் உருவாக்கிய சட்டம் ஆகும். நீங்கள் தான் அரசுக்கு கட்டளை பிறப்பித்து உள்ளீர்கள்.
      * உங்களின் கட்டளையை மற்றும் அரசியல்சாசனக் கட்டளையை ஏற்க மறுக்கும் அரசியல் வாதிகளுக்கு / வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்போம்.
      * நீதிபதி ஒரு பொது ஊழியர் ஆவார். நீதிபதி சட்ட விரோதமான முடிவை / தீர்ப்பை அளிப்பது என்பது இ.தா.ச. பிரிவு 219 –ன்படி குற்றமாகும்.
      * அரசியல்சாசனக் கோட்பாடு 2௦ - ன்படி குற்றம் செய்த நீதிபதி தண்டிக்கப்பட வேண்டும்.
      * அரசியல்சாசனக் கோட்பாடு 14 –ன்படி நீதிபதி சட்டத்தின் முன் சமம் ஆவார். *
      * அரசியல் சாசனம் செயல்பட வேண்டும்.
      * அரசியல் சாசனம் செயல்பட ஆவன செய்ய வேண்டியது குடியரசுத் தலைவரின் கடமை ஆகும்.
      * குடியரசுத் தலைவரைக் கடமையைச் செய்ய வைப்போம்.
      * தேர்தலில் நிற்கும் வேட்பாளர் சட்டப்படியான மற்றும் எழுத்துப் பூர்வமான உடன்படிக்கையை தொகுதி மக்களிடம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர் தேர்தலில் நிற்க தகுதி அற்ற வேட்பாளர் என்று முடிவு செய்து மக்கள் ஓட்டுப் போடக் கூடாது.