Wednesday, July 8, 2015

குளியாடா - தாளவாடி - குளியாடா....

தாளவாடி-குளியாடா வழித்தடமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்..

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். மலைவாழ் பள்ளி மாணவர்களுக்காக தாளவாடியிலிருந்து குளியாடா இயக்கப்படும் அரசு பேருந்து படும்பாடு.சொல்லி மாளாது.காரணம் வழித்தடத்தின் அவலநிலைதாங்க.கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அதே சமயம் அப்பகுதி மக்களை நினைத்தால்தாங்க பரிதாபமாக இருக்கிறது.

             மேலே கண்டுள்ள புகைப்படங்கள் 2015ஜூலை 08 ந் தேதி இன்று காலை   அரே பாளையம் ,மாவள்ளம் தாண்டி தேவர் நத்தம் ஊருக்கு முன்னதாக உள்ள சாலைவளைவில்  ஏற்பட்ட சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்கு ஆளாகியபோது பேருந்து மேற்படி இயக்கமுடியாமல் தடை ஏற்பட்டு நின்றபோது காலை ஏழுமணியளவில் எடுத்த படங்கள். வளைவு நெளிவாகவும் ஏற்ற இறக்கமாகவும் இருக்கும் ஒருவாகன மலைப்பாதையான இந்தச்சாலை   மிகவும் மோசமான நிலையில் பழுது ஏற்பட்டு இருப்பதே காரணமாகும்.
 ஆனால் பேருந்து இயக்கும் கால அட்டவணையோ????குளியாடா தொடங்கி ஆசனூர், தாளவாடி,திகனாரை,பனகஹள்ளி வரை பள்ளி மாணவர்களுக்காக இடைவிடாது ஓட்டவேண்டிய சூழ்நிலை!.....
  ஒருமுறையாவது அந்த சாலையினை சென்று பார்வையிட்டு வாங்க..அரசுப் பேருந்தும் அப்பகுதி மக்களும் படும்பாடு புரியும்..


No comments:

Post a Comment