Tuesday, September 29, 2015

தமிழ்நெட்'99 முறை மிக எளிதானது.


 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். அனுபவப்பட்ட ஓட்டுநராகிய நான் உறுதிபட சொல்கிறேன்.நம்புங்க.. 

     கணினியில்  தமிழ்  தட்டச்சு செய்வதற்காக நம்மவர்கள் தற்போது  
தமிழ் தட்டச்சுமுறை விசைப்பலகை, வானவில் விசைப்பலகை , பாமினி விசைப்பலகை, இளங்கோ தமிழ் விசைப்பலகை, தமிழ் மாடுலர் விசைப்பலகை, சிங்கப்பூர் விசைப்பலகை, மயிலை விசைப்பலகை, தமிழ்நெட்'99முறை விசைப்பலகை ,என பல வடிவங்களில் தட்டச்சு முறையிலும்,ஒலிப்பியல் முறையிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கூடுதலாக தமிங்கிலம் முறை,ஒலிப்பெயர்ப்பு முறை என தமிழில் புதியவர்களை குழப்பும் வண்ணம் பலவித முறைகளை அவரவர் விருப்பம் போல பயன்படுத்தப்படுவதால் புதியவர்கள் பயந்து தமிழில் தட்டச்சு செய்யும் வேலையே வேண்டாம் என முடிவு எடுத்துவிடுகின்றனர். இளைய சமுதாயத்திற்கு மட்டுமின்றி தமிழ் எழுதவும்,படிக்கவும் மட்டுமே தெரிந்த தமிழார்வலர்களுக்கும் ,இருபால் ஆசிரியப்பெருமக்களுக்கும் எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.கணினியில் ஆங்கில எழுத்து தட்டச்சும் முறை ஏற்கனவே நமக்குத்தெரியும் அல்லவா!,கணினி விசைப்பலகையை தமிழ்'99 முறைக்கு மாற்றினால்  ஒவ்வொரு ஆங்கில எழுத்திலும் என்ன தமிழ் எழுத்துக்கள் பதிந்துள்ளன என அறிந்துகொள்வோம்.

 தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ள தமிழ் நெட்'99முறையை  தட்டச்சு செய்ய பயன்படுத்துங்க.

தமிழ்'99 முறை  ஒலிப்பியல் முறையாகும்.
ஒலிப்பியல் என்றால் என்னங்க?
அதைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்க..
 நம் பேச்சு முறைதாங்க ஒலிப்பியல் முறை. அதாவது உச்சரிக்கும் அனைத்து  வார்த்தைகளும் எழுத்துக்களாக எழுதலாம்.அவ்வாறு எழுதும் எழுத்துக்களை உச்சரிக்கும்போது மெய்யெழுத்து +உயிரெழுத்து என இரண்டும் சேர்ந்து ஒலிப்பதை உணர்வீர்கள்.அதாவது உயிர்மெய் எழுத்துக்கள் என 247எழுத்துக்களையும் நிதானத்துடன் மெதுவாக உச்சரித்துப்பாருங்கள் உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்தும் மெய்யெழுத்தாகவும்,உயிரெழுத்தாகவும் பிரித்து உச்சரிக்கப்படுவதை உணரலாம்.அந்த முறைதாங்க ஒலிப்பியல் முறை...
எழுத்தியல் முறை என்றால் என்னங்க? எழுத்தியல் முறையைப்பற்றி தெரிந்துகொள்வீர்களேயானால் ஒலிப்பியல் முறை பற்றி எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

            உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளையும் எழுத்துக்களாக எழுதும்போது அவைகளுக்கு வரி வடிவம் கொடுப்பதை கவனியுங்கள்.  கோபி என்று உச்சரிப்பதை  எழுதும்போது  கோ என்ற முதலெழுத்தை மூன்று பிரிவுகாக பிரித்து எழுதுகிறீர்கள்,அடுத்து பி என்ற எழுத்தை இரு பிரிவுகளாக பிரித்து எழுதுகிறீர்கள். அதுபோல

         ஒலிப்பியல் முறையில் உதாரணமாக  'கோபி' என்ற ஊரை ஒலிக்கும்போது அதே சிந்தனையில் 'கோபி' என்ற வார்த்தைக்கான மெய்யெழுத்து உள்ள விசையையும்,உயிரெழுத்து உள்ள விசையையும் தட்டினால்  போதுமானது. அதாவது 'க் ஓ ப் இ' என்று  மெய்யெழுத்து உயிரெழுத்து என மாறி மாறி தட்டச்சினால் கணினி தானாக எழுத்துக்களை சேர்த்து  'கோபி' என உயிர் மெய் எழுத்துக்களாக பதிவு செய்துவிடும்.

        இன்னும் சுருக்கமாக  புரிந்துகொள்ள வேண்டுமானால்  தமிழ் எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள்,மெய்யெழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்கள் என எழுதி படிக்கிறோம் அல்லவா! அதே முறையில் தமிழ்'99 முறையினையும் பயன்படுத்துங்க.

அதாவது, 
(1) மெய்யெழுத்துக்கள் பெற சாதாரணமாக கீழ்கண்ட ஆங்கில எழுத்துக்களை தட்டச்சினால் போதுமானது.
 h  க      (அதாவது  h அழுத்தினால் க எழுத்து பதிவாகும்).
ங      (அதாவது b அழுத்தினால் ங எழுத்து பதிவாகும்).
 [  ச      (அதாவது  [ அழுத்தினால்  ச எழுத்து பதிவாகும்).
 ]  ஞ    (அதாவது ] அழுத்தினால்  ஞ எழுத்து பதிவாகும்).
 o  ட    (அதாவது o அழுத்தினால்  ட எழுத்து பதிவாகும்).
 p     (அதாவது p அழுத்தினால்  ண எழுத்து பதிவாகும்).
 l   த     (அதாவது  l அழுத்தினால்  த எழுத்து பதிவாகும்).
;         (அதாவது ; அழுத்தினால் ந எழுத்து பதிவாகும்).
 j        (அதாவது  j அழுத்தினால்  ப எழுத்து பதிவாகும்).
 k        (அதாவது k அழுத்தினால்  ம எழுத்து பதிவாகும்).
 '       (அதாவது  ' அழுத்தினால்  ய எழுத்து பதிவாகும்).
ர        (அதாவது m அழுத்தினால்  ர எழுத்து பதிவாகும்).
        (அதாவது n அழுத்தினால்  ல எழுத்து பதிவாகும்).
 v  வ    ( அதாவது v அழுத்தினால்  வ எழுத்து பதிவாகும்).  
 /        (அதாவது  / அழுத்தினால்  ழ எழுத்து பதிவாகும்).
       ( அதாவது y அழுத்தினால் ள எழுத்து பதிவாகும்).
 u       (அதாவது  u அழுத்தினால்  ற எழுத்து பதிவாகும்).
 i      (அதாவது  i அழுத்தினால்  ன எழுத்து பதிவாகும்).
 மேற்கண்ட பதினெட்டு ஆங்கில எழுத்துக்களை சாதாரணமாக  தட்டச்சினால் (ஷிப்ட் கீ எனப்படும் தூக்குவிசை அழுத்தாமல் ) அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எதிரில் உள்ள தமிழ் எழுத்துக்களாக அதாவது அகரமேறிய மெய்யெழுத்துக்களாக பதினெட்டும் பதிவாகும்.
 (அகரம் ஏறிய என்றால் உயிர்மெய் எழுத்துக்களாக பதியும்.தூய மெய்யெழுத்துக்கள் பெற வேண்டுமானால் கூடவே f எழுத்தை தட்டச்சுங்க புள்ளி வைத்துக்கொள்ளும். புரியவில்லை என்றால் நேரில் பயிற்சியின்போது தெளிவு பெறுங்கள்)
==================================================================
(2) கீழ் கண்டுள்ள  வடமொழி எழுத்துக்களுக்கு மட்டும்SHIFT KEY என்னும்  தூக்கு விசை பயன்படுத்த வேண்டும்.நாம் பயன்பாட்டில் தூக்குவிசை அழுத்தி கேப்பிட்டல் ஆங்கில எழுத்து  பதிவிடுவோம் ஆதலால்  தூக்குவிசை SHIFT KEY அழுத்திக்கொண்டு என்று சொல்வதைவிட கேப்பிட்டல் எழுத்தாக பதிவிடுவோம் என்று சொல்வோம்)
ஸ  அதாவது
  Q என கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஸ எழுத்து பதிவாகும்.

W ஷ   அதாவது 
    W கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஷ எழுத்து பதிவாகும்.

E  ஜ    அதாவது  
    E கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஜ எழுத்து பதிவாகும்.

R ஹ  அதாவது 
    R கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஹ எழுத்து பதிவாகும்

T க்ஷ அதாவது  
 T கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் க்ஷ எழுத்து பதிவாகும்

ஸ்ரீ அதாவது
  Y கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஸ்ரீ எழுத்து பதிவாகும்.

தூக்குவிசை என்னும் SHIFT KEY அழுத்திக் கொண்டே  மேற்கண்ட  ஆங்கில எழுத்துக்களைஅழுத்தினால் எதிரில்  உள்ள வடமொழி எழுத்துக்கள் பதிவாகும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர் என நினைக்கிறேன்..
=====================================================================
(3) உயிர் எழுத்துக்கள் 12 ம் பெற  கீழ்கண்ட ஆங்கில எழுத்துக்களை சாதாரணமாக தட்டச்சினால் போதுமானது.அதாவது  a அழுத்தினால் அ உயிர் எழுத்து கிடைக்கும் இவ்வாறாக அனைத்து உயிர் எழுத்துக்களும் பெறலாம்.
 a  அ   (அதாவது a விசையை அழுத்தினால் அ பதிவாகும்).
ஆ    (அதாவது q விசையை அழுத்தினால் ஆ பதிவாகும்).
இ     (அதாவது s விசையை அழுத்தினால் இ பதிவாகும்).
ஈ    (அதாவது w விசையை அழுத்தினால் ஈ பதிவாகும்).
d  உ      (அதாவது d விசையை அழுத்தினால் உ பதிவாகும்).
    (அதாவது e விசையை அழுத்தினால் ஊ பதிவாகும்).
எ     (அதாவது g விசையை அழுத்தினால் எ பதிவாகும்).
       (அதாவது t விசையை அழுத்தினால் ஏ பதிவாகும்).
       (அதாவது r விசையை அழுத்தினால் ஐ பதிவாகும்).
     (அதாவது c விசையை அழுத்தினால் ஒ பதிவாகும்).
ஓ      (அதாவது x விசையை அழுத்தினால் ஓ பதிவாகும்).
ஔ   (அதாவது z விசையை அழுத்தினால் ஔ பதிவாகும்).
f  ஃ   (அதாவது f விசையை அழுத்தினால் ஃ பதிவாகும்.
   அதே நேரத்தில்  h க - போன்ற அகரமேறிய மெய்யெழுத்தை அழுத்திவிட்டு பிறகு f அழுத்தினால் 'க் ' போன்ற தூய மெய்யெழுத்தாக பதியும்.  ).

மேற்கண்ட பன்னிரண்டு ஆங்கில எழுத்துக்களை தூக்குவிசை என்னும் ஷிப்ட் கீ அழுத்தாமல் சாதாரணமாக  தட்டச்சினால் அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எதிரில் உள்ள தமிழ் எழுத்துக்களாக அதாவது உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் பதிவாகும். கவனியுங்க இங்கு  f எழுத்து மட்டும் தனியாக தட்டச்சினால் ஃ ஆகவும், அகரம் ஏறிய மெய்யெழுத்து தட்டச்சியபிறகு f எழுத்தை தட்டச்சினால் புள்ளி வைத்து அதாவது தூய மெய்யெழுத்தாக பதியும்.
======================================================================
(4) தமிழ் எழுத்துக்கள் 247 எழுத்துக்களையும் பெற மேற்கண்டவாறு  மெய் எழுத்துக்கள் 18 மற்றும் உயிர் எழுத்துக்கள் 12 ஆக முப்பது எழுத்துக்களைக் கொண்டு தூக்குவிசை அழுத்தாமல் சாதாரணமாக தட்டச்சினால் போதுமானது.முப்பது எழுத்துக்களை தட்டச்சும்போது கணினி புரிந்துகொண்டு மெய் எழுத்தையும் உயிரெழுத்தையும் தானாக சேர்த்துக்கொண்டு  நமக்கு 247 உயிர்மெய் எழுத்துக்களையும் கொடுக்கும்.
மிக எளிதானது ஒருமுறை பயன்படுத்திப்பாருங்க.இத்தனை காலம் வீணாகிவிட்டதாக வருத்தப்படுவீங்க.அத்தனை எளிதானதுங்க.
=========================================================================
நாம் தட்டச்சு செய்யும் ஆங்கில எழுத்து விசைப்பட்டனும் தமிழுக்குரிய  மெய் எழுத்துக்களும்,உயிர் எழுத்துக்களும் இரண்டையும் தொடர்ந்தாற்போல தட்டச்சும்போது அவைகளுக்கேற்ப உயிர் மெய் எழுத்துக்களாக மாற்றமடைந்து பதியும் எழுத்துக்களும் இனி கவனியுங்க.....
 a q s w d e g t r c x z f   இவைகள் முறையே அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,ஃ ஆகிய எழுத்துக்களாகப்  பதிவாகும் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.

 h b [ ] o p l ; j k ' m n v / y u i இவைகள் முறையே க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன ஆகிய எழுத்துக்களாகப் பதிவாகும் என்பதையும் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
அதாவது மெய் மற்றும் உயிர் எழுத்துக்களுக்கான இந்த முப்பது விசைகளையும் நன்கு அறிந்துகொண்டாலே போதுமானது.

உதாரணமாக
க       எழுத்து பெற ha என இருவிசைகளை அழுத்துங்க . 
கா     எழுத்து பெற hq என இருவிசைகளை அழுத்துங்க. 
கி       எழுத்து பெற hs என இரு விசைகளை அழுத்துங்க.
கீ       எழுத்து பெற hw  என இருவிசைகளை அழுத்துங்க. 
கு       எழுத்து பெற hd  என இருவிசைகளை அழுத்துங்க.
கூ       எழுத்து பெற he  என இருவிசைகளை அழுத்துங்க. 
கெ      எழுத்து பெற hg  என இருவிசைகளை அழுத்துங்க. 
கே      எழுத்து பெற ht  என இருவிசைகளை அழுத்துங்க. 
கை       எழுத்து பெற hr  என இருவிசைகளை அழுத்துங்க. 
கொ     எழுத்து பெற hc  என இருவிசைகளை அழுத்துங்க. 
கோ     எழுத்து பெற hx  என இருவிசைகளை அழுத்துங்க. 
கௌ     எழுத்து பெற hz  என இருவிசைகளை அழுத்துங்க. 
க்       எழுத்து பெற hf  என இருவிசைகளை அழுத்துங்க.

இவ்வாறாக உயிர்மெய் எழுத்துக்களைப் பெற இருவிசைகளை பயன்படுத்த வேண்டும்.உயிர் எழுத்து மட்டும் மற்றும் மெய்யெழுத்து மட்டும் பெற அதற்குரிய ஒருவிசை மட்டும் அழுத்தினால் போதும்.

       மறவாதீங்க சாதாரணமாக தட்டச்சு மட்டுமே செய்து மேற்கண்ட முப்பது எழுத்துக்களையும் பதிவிடலாம்.

            சரி,இனி வடமொழி எழுத்துக்களையும் தமிழில் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம்.அப்படியானால் குறைந்த அளவே பயன்படும் இந்த வடமொழி எழுத்துக்களை பதிவிடுவது எப்படி? என சந்தேகம் வரலாம்!.. இதோ நாம் வடமொழி எழுத்துக்களான ஸ ஷ ஜ ஹ ஸ்ரீ  இந்த ஐந்து எழுத்துக்களை மட்டுமே  எப்போதாவது பயன்படுத்துகிறோம்.இந்த ஐந்து எழுத்துக்களும் பதிவு செய்ய மட்டும் Q,W,E,R,T,Y, என்ற எழுத்துக்களை அதாவது கேப்பிட்டல் எழுத்துக்கள் பெறுவதற்காக பயன்படுத்தும் தூக்குவிசை என்னும் SHIFT KEY அழுத்த வேண்டும். இரண்டு நாட்களிலேயே இவை அனைத்தும் பழக்கத்திற்கு வந்துவிடும்.
அனுபவப்பட்ட ஓட்டுநராகிய நான் உறுதிபட சொல்கிறேன்.நம்புங்க..

 தமிழுக்கு தொண்டு செய்வோம் தரணியில் தமிழுக்கு உயர்வு அளிப்போம்.
 என அன்புடன், 
C.பரமேஸ்வரன், 
சத்தியமங்கலம், 
ஈரோடு மாவட்டம் - 638402

Monday, September 14, 2015

உலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். வருகிற 2015செப்டெம்பர்30ந் தேதிக்குள் உங்க படைப்புகளை அனுப்புங்க.பரிசும் பாராட்டும் காத்திருக்கிறதுங்க..நான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரை எழுதி அனுப்புகிறேன்...வெற்றி என்பதல்லங்க முக்கியம்..புதுகை விழாக்குழு  நண்பர்களுக்கு ஊக்கம் தருவதே முக்கியம். தன்னலம் கருதாமல் தமிழ்ச்சமூக வளர்ச்சி மற்றும் தமிழ் விழிப்புணர்வுக்காக ஒன்றிணைவோம் வாங்க...வருகிற 2015அக்டோபர் 11 ந்தேதி புதுக்கோட்டையில்...

வலைப்பதிவர் சந்திப்பு 2015: உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -  “வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ் மின் தமிழ் இலக்கியப்போட்டிகள் ....

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -
                                மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

 “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  
            கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி- 
              கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(2) 
                    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -
           சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(3)     
            பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - 
       பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 

வகை-(4)  
                     புதுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு

வகை-(5)   
                   மரபுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும் தலைப்போடு

போட்டி விதிகள்
(1)   படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.
(2)    இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.
(3)   “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை  மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
(4)   வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.
(5)    படைப்பு வந்துசேர இறுதிநாள்30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)
(6)   11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழா- 2015இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.
(7)   உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே.  மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com
(8)   தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது,  பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.
(9)   வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.
(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.
-----------------------------------------------------------------
அன்பான வேண்டுகோள் ஐந்து -
(1)   போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.
(2)   விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.
(3)   அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!
(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள்-  -http://bloggersmeet2015.blogspot.com
(5)உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம். 

      மிகச்சிறப்பான ஏற்பாடுகளை ஆர்வத்துடன் தமிழுக்காக இணையத் தமிழுக்காக அயராது மாதக்கணக்கில் செய்து வரும் நண்பர் திருமிகு.திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள் மற்றும் விழாக்குழுவினரை வலைத்தமிழுலகம் சார்பாக வாழ்த்தி வணங்குகிறேன்..
 என
அன்புடன்,
 C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-638402
ஈரோடு மாவட்டம்.

Saturday, September 12, 2015

ஐந்தாம் படித்தவர் வாதாடி வெற்றி பெற்றவர் கதை

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். நீங்களும் வாதாடலாம் வாங்க.
எஸ்.பி.ஐ. வங்கி தோற்றது:
வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்!
********************************************************************************************
டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.
இது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.
ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.
தனி ஒரு மனிதன் நினைத்தால்கூட
மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்!
என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
-கிருத்திகா மாடசாமி-

Wednesday, September 9, 2015

பொது நல வழக்கு


 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.

       பொது நல வழக்கு !! PUBLIC INTEREST LITIGATION.,
பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்திலும்,உயர் நீதிமன்றத்திலும் தான் தொடர வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர்.,
சமூக ஆர்வலர்களும் சிலர்,எதற்கு எடுத்தாலும் உயர் நீதிமன்றத்தை நாடுவது உண்டு.,
பொது நல வழக்கை உங்கள் வட்டத்தில் உள்ள மாஜிஸ்ட்டரேட் கோர்ட்டில் கூட தாக்கல் செய்யலாம்.,
அதாவது இந்திய அரசியல் சாசனம் 1950 கோட்பாடு 32 இன் கீழ் பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.,
அதே போல் இந்திய அரசியல் சாசனம் 1950 கோட்ப் 226 இன் கீழ் பொது நல வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.,
அதே போல் குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 133 இன் கீழ் பொது நல வழக்கை மாஜிஸ்ட்டரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.,
உங்கள் வட்டாரத்தில் உள்ள மாஜிஸ்ட்டரேட் கோர்ட்டில் தமிழ் மொழியில் பொது நலத்திற்கு பாதிப்பு தரும் விஷயங்களை பற்றி எழுதி தாக்கல் செய்யலாம்.
..
YOU CAN FILE A PIL IN THE MAGISTRATE COURT UNDER CODE OF CRIMINAL PROCEDURE 1973 SECTION 133.,

AND ASLO ,
YOU CAN FILE A PIL IN THE INDIAN CONSTITUTIONAL LAW 1950 ARTICLE 32.,
YOU CAN FILE A PIL IN THE HIGH COURT UNDER INDIAN CONSTITUTIONAL LAW 1950 226.,
T S ARUNKUMAR.,
VILLUPURAM.

ANYBODY HAVE ANY DOUBTS IN THE ABOVE STATUS.,
OR
HOW TO FILE PIL,.
MESSAGE TO MY INBOX OR MAIL TO THIS ID.,
advocate_tsarunkumar@yahoo.com
வழக்கறிஞர் அருண்குமார் ஐயா அவர்களுக்கு நன்றிங்க...,

தகவல் அறியும் உரிமைச்சட்டம்-

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மற்ற அரசுத்துறைகளுக்கு புகார் அனுப்பியோ,மனு கொடுத்தோ
 ஒரு மாதம் ஆன பிறகும் நடவடிக்கை இல்லையா??
..வருத்தமோ கவலையோ வேண்டாம்.,
      மனதை வலுப்படுத்துங்கள் அதற்கான ஆலோசனை பாருங்கள்.,
              10 ரூபாய் நீதிமன்ற வில்லை,ஒரு வெள்ளை பேப்பர் போதும்.,அவர்களை வேலை செய்ய வைக்க.,

No action taken on your petition,then what you do?

Read the below legal guidelines.

தகவல் சட்ட விண்ணப்பத்தில் பார்வை பத்தியில் உங்கள் மனு ஏற்கப்பட்டது என்பதற்கு நீங்கள் வைத்துள்ள ஒப்புகை ரசீது நகலை இணைத்து அதனை குறிப்பிட்டு..,
...
பின் வருமாறு கேள்விகளை கேளுங்கள் ..,
..

மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தின் மீது எவ்வகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய “தினசரி முன்னேற்ற அறிக்கை” என்ற விவரங்களை / ஆதாரங்களை தரவும். ஆதாரம் : Petitions - Petitions presented to Government Officers - Procedures for dealing with grievance Petitions - Instructions Issued. G. O. Ms. No. 114, Dated : 02.08.2006. Personal and Administrative Reforms (A) Department. Chief Secretary to Government).

மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தின் மீது எந்தெந்த அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் வசம் இருந்தது, அவர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் பற்றிய விவரங்கள் தயவு செய்து தரவும்.

எந்தெந்த அதிகாரிகளிடம் / அலுவலர்களிடம் எவ்வளவு காலம் இந்த புகார் இருந்த்து.
அவர்கள் ஒவ்வொருவரும் இதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்ற விவரங்களை / ஆதாரங்களை தரவும். ஆதாரம் : From the Government Of India, Ministry Of Personal, Public Grievance and Pensions, New Delhi, D. O. No. G-13013 / 1 / 2006-PG Dt. 05.05.2006. TN GO Ms. No. 114, Dt. 02.08.2006.

மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தினை பெற்றுக் கொண்ட தங்கள் அரசு அலுவலகம் / பிற அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் ஒவ்வொருவரிடமும் என் விண்ணப்பம் பெறப்பட்டதற்கும் பின்னர் வேறு பிரிவுகளுக்கு அனுப்ப்பட்ட்தற்கும் உரிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும். ஆதாரம் : G. O. Ms. No. 89, P & AR (A), Dept. Dt.13.05.1999 ).

மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தினை பெற்றுக் கொண்ட தங்கள் அரசு அலுவலகம் / பிற அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் மேற்சொன்ன ஆதாரங்களின் படி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் தக்கவாறு செயல்படவில்லை. எனவே, இந்த அதிகாரிகள் விதிகளை மீறிய குற்றத்திற்கு உள்ளாகிறார்கள் எனில் நடத்தை விதிகளின்படி (Conduct Rules) தவறான நடத்தைக்கான குற்றத்திற்கும் ஆளாகிறார்களா என்பதையும் மேற்கண்ட விதிகளை மீறியதன் மூலம் அவர்கள் நடத்தை விதிகளை மீறிவிட்டதைக் காட்டும், இந்த அதிகாரிகளுக்கான, “நடத்தை விதிகள்” என்னென்ன என்பவை பற்றிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும். ஆதாரம் : Para 167 (1) The Tamil Nadu Government Business rules and Secretariat Instructions) G. O. Ms. No. 66, P & AR (A) Dept. Dated 23.02.1993

மேற்கண்ட விதிகளை மீறியதற்காக மற்றும் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்த அதிகாரிகள் மீது, துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எத்தனை நாட்களுக்குள் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பவை பற்றிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும். ஆதாரம் G. O. Ms. No. 26, P & AR (A) Dept. dated 15.02.2008

முன்னுரிமை கொடுக்கப்பட்டு சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட புகார்கள் / விண்னப்பங்கள் / திருப்பி அனுப்பபட்ட கடிதங்கள் / புகார்கள் / குறைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், “கண்காணிப்புத்துறை” எப்பொழுது அத்தகைய விசாரணையை மேற்கொள்ளும் என்பவை பற்றிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும்
மேற்கண்ட பார்வை 1-யில் சொல்லப்பட்ட, எனது புகாருக்கு பிறகு பெறப்பட்ட புகார்கள் / விண்ணப்பங்கள் / திருப்பி அனுப்பபட்ட கடிதங்கள் / மேல் முறையீடுகள் / குறைகள் இவற்றில் ஏதேனும் அலுவல் கடித வரிசை எண் இல்லாமல் முன்னுரிமை கொடுக்கப்பட்டு விசேசமாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணங்கள் தரவும'

மேற்சொன்ன இனங்களுக்குரிய தகவல்கள் / ஆவணங்களில் எவையேனும், சட்டப்பிரிவு 8 (1) (b)-ன் படி தடை செய்யப்பட்டிருப்பின், ஆதாரங்களுடன் முழு விவரங்கள் தரவும்

சட்டப்பிரிவு 7 (8) (iii)-ன் படி, முதல் மேல் முறையீட்டு அலுவலரின் முழு முகவரி தரவும் .

இப்படி கேள்வி கேளுங்கள்.,
உங்கள் மனு மீது நடவடிக்கை எடுப்பார்கள்.,