Saturday, October 3, 2015

உலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இணையதள வாசகர்களே,பரிசு ரெடி!  வாங்க ரெடியா?
      பதிவிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றிங்க..

வலைப்பதிவர் திருவிழா: விமர்சனப் போட்டியில் பங்கேற்போருக்கு பரிசு

First Published : 04 October 2015 05:35 AM IST
                வலைப்பதிவர் திருவிழாவின் ஒரு பகுதியாக வாசகர்களுக்கான இலக்கிய விமர்சனப் போட்டியில் பங்கேற்போருக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வலைப்பதிவர் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்  கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்ட அறிக்கை:
 வருகின்ற அக். 11 அன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் திருவிழாவுக்கான மின்-இலக்கியப் போட்டிகள் h‌t‌t‌p://​b‌l‌o‌g‌g‌e‌r‌s‌m‌e‌e‌t2015.b‌l‌o‌g‌s‌p‌o‌t.c‌o‌m​ எனும் இணைய தளத்தில் பெறப்பட்டுள்ளன. தற்போது,பெறப்பட்டுள்ள படைப்புகள் குறித்த விமர்சனப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. விமர்சனப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், h‌t‌t‌p://​b‌l‌o‌g‌g‌e‌r‌s‌m‌e‌e‌t2015.b‌l‌o‌g‌s‌p‌o‌t.c‌o‌m எனும் இணைய தளத்துக்கு வந்த படைப்புகள் குறித்த விமர்சனங்களை b‌l‌o‌g‌g‌e‌r‌s‌m‌e‌e‌t2015@‌g‌m​a‌i‌l.c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
நடுவர் குழு தேர்வு செய்யும் விமர்சகருக்கு முதல் பரிசாக ரூ. 5,000-மும் 2-ஆம் பரிசாக ரூ. 3,000 மற்றும் 3-ஆம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும். விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்.
ஒன்றுக்கும் மேற்பட்டோர் எழுத்தாளர்களை தேர்வு செய்து மதிப்பிட்டு இருப்பின், பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு 94431 93293 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் -638402
ஃபேஸ்புக் முகவரி parameswaran driver
 

No comments:

Post a Comment