Saturday, January 9, 2016

சாலை பாதுகாப்பு கல்வி - சாலை பற்றிய அறிவு - 01

                              ROAD SAFETY EDUCATIONAL IN TAMIL.-01
    
மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.சாலை பாதுகாப்பு கருதி அன்பன் பரமேஸ் டிரைவர் சத்தியமங்கலத்திலிருந்து உங்களுக்காக எழுதுவது......
           நாம் உயிர்வாழ்வதற்கான அனைத்து தேவைகளையும் போக்குவரத்து மூலமாகவே நிறைவேற்றி வருகிறோம்.குறிப்பாக சாலை போக்குவரத்து மிகவும் முக்கியமாக பயன்படுகிறது.  சக்கரமும் சாலையும் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.வாகனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன.நடந்துசெல்வது தொடங்கி இரு சக்கர வாகனங்கள் முதல் பல சக்கர வாகனங்கள்வரை பலரும் பல வடிவங்களிலும் பல்வேறு வேகங்களிலும் வாகனங்களை ஓட்டிக் கொண்டோ,வாகனங்களில் பயணம் செய்துகொண்டோ இருக்கிறோம்.
        சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,பொருட்களை எடுத்துச்செல்பவர்களாக,வாகனம் ஓட்டுபவர்களாக போக்குவரத்து செய்கிறோம்.  நமது பாதுகாப்பிற்காகவே சாலைவிதிகளும்,மோட்டார் வாகன சட்டங்களும்,காவல்துறைசட்டங்களில் சிலவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியாமல் பயணத்தின்போது சாலைவிதிகள் மற்றும் சாலை பற்றிய அறிவு இல்லாமலும்,வாகனங்கள் பற்றிய அறிவு இல்லாமலும் பயணிப்பது எப்படி என்றுகூடத்தெரியாமலும் சாலையில் போக்குவரத்து செய்து விபத்துக்கு காரணமாகிறோம்.

  விபத்து ஏற்படும்போது கொடுங்காயம்,நிரந்தர ஊனம்,உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.மோதிய வாகனங்கள் சேதம்,ஏற்றிவந்த பொருட்கள் சேதம் போன்ற இழப்புகளும் ஏற்படுகின்றன.அவ்வழியே போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டு  அந்த சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் மன உளைச்சல்,தேவைகள் இழப்புடன்,நேர இழப்பும் ஏற்படுகின்றன.
  விபத்தில் சிக்குண்ட நமக்கு வருமான இழப்புடன்,பொருளாதார இழப்பும் ஏற்பட்டு நம் குடும்பத்தாருக்கும் நம்பியுள்ளவர்களுக்கும் மன உளைச்சல் மற்றும்  உடல் வேதனையோடு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது.அத்துடன் காவல்துறை,போக்குவரத்துத்துறை,மீட்பு பணித்துறை,மருத்துவத்துறை,சட்டத்துறை,காப்பீட்டுத்துறை, போன்ற சம்பந்தப்படவர்களுக்கு வேலைப்பளுவும் ஏற்படுகிறது.

        அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துக்களை வேடிக்கை பார்க்கிறோமே தவிர விபத்தில் சிக்குண்டவர்கள் அனுபவிக்கும் வேதனைகளையோ,இழப்புகளையோ,விபத்துக்கான காரணங்களையோ,விபத்தை தவிர்ப்பதற்கான செயல்பாடுகளையோ  சிந்தனை கூட செய்வது இல்லை.   ( parameswaran driver)
'சாலை பாதுகாப்பு  நம் உயிர் பாதுகாப்பு'மட்டுமின்றி  'சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு'.ஆதலால்  போக்குவரத்து அவசியமாகிவிட்ட இன்றைய சூழலில் சாலை பாதுகாப்பு கல்வி அனைவரும் பெறுவது அவசியம்.ஆதலால் பாதுகாப்பான பயணத்திற்கு சாலைவிதிகள் பற்றியும்,மோட்டார் வாகன சட்டங்கள் பற்றியும் கற்போம்.
(1) சாலை அறிவு (2)பயணப்பாதுகாப்பு (3)வாகன அறிவு (4)மோட்டார் வாகன சட்டங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

(1) சாலை பற்றிய அறிவு................. 
        சாலைகள் நமது நாட்டின் நிலப்பரப்பிற்கேற்ப சரிவுகளாகவோ,மேடு பள்ளமாகவோ,வளைவுகளாகவோ,குறுகிய பாதைகளாகவோ, கிளைச்சாலைகள் மற்றும் பிரதானச்சாலைகள் சந்திப்புகளாகவோ,அமைந்துள்ளன.அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்துக் குறைவுக்கேற்ப பராமரிப்பு குறைவாக பழுதடைந்தோ உள்ளன.
                    சாலைகளை, நகர்ப்புறச் சாலைகள் என்றும்,கிராமப்புறச் சாலைகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 (1)நகர்ப்புறச் சாலைகளை, வீதி,பிரதான சாலை,நேர்ச்சாலை,ஆர்டீரியல் சாலை , எனவும், 
   (2)கிராமப்புறச் சாலைகளை, விரைவுச்சாலைகள்,தேசிய நெடுஞ்சாலைகள்,பெரிய மாவட்டச்சாலைகள்,மற்ற மாவட்ட சாலைகள்,கிராமச்சாலைகள் எனவும் பலவகைப்படுத்தலாம்.

 நகர்ப்புறச்சாலைகள்,
 வீதி.
       பொதுமக்கள் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பாதையாகும்.வீதிகள்  நகரின் பிரதானச்சாலைக்கு செல்ல பயன்படுகின்றன. 

பிரதானச்சாலை.
    இது நகரத்தின் பல பகுதிகளில் முக்கிய போக்குவரத்தை எடுத்துச்செல்கிறது.

நேர்ச்சாலை.
    நகரத்தின் பல பகுதிகளிலிருந்து நகரத்தின் மையத்திற்குப் போக்குவரத்தை நேராக எடுத்துச் செல்லும் சாலையாகும்.

ஆர்டீரியல் சாலை.

        இது நகரத்தின் மிகவும் முக்கியமான சாலையாகும். கிராமப்புறச்சாலைகள்  நகரத்தினுள் நுழையும் போது ஆர்டீரியல் சாலைகளாக மாறிவிடும்.

கிராமப்புறச் சாலைகள்,
 விரைவுச்சாலைகள்,
    விரைவுச்சாலைகளை  தங்க நாற்கரச் சாலைகள் என்றும் கூறப்படுகிறது.
 மத்திய அரசால் பராமரிக்கப்படுகிறது.நான்கு முதல்  ஆறு தடச்சாலைகளாக பயன்படுத்தப்படுகிறது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் துரிதப்போக்குவரத்துக்காக விரைவுச்சாலைகள் போடப்படுகின்றன.கி.மீ.கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.
  
தேசிய நெடுஞ்சாலைகள்,
           தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு பராமரிக்கிறது.இரண்டு தடம் முதல் நான்கு தடச்சாலைகளாக பராமரிக்கப்படுகிறது.விரைவான போக்குவரத்திற்கு பயன்படுகிறது.மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.

மாநில நெடுஞ்சாலைகள்,
             மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோமீட்டர் கற்களில் பச்சை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

பெரிய மாவட்டச்சாலைகள்,
          பெரிய மாவட்டச்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோ மீட்டர் கற்களில் நீல வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

மற்ற மாவட்டச்சாலைகள்,
           மற்ற மாவட்டச்சாலைகளை மாநில அரசின் உதவியுடன் பஞ்சாயத்து யூனியன் பராமரிக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

கிராமச்சாலைகள்,
            கிராமச்சாலைகளை பஞ்சாயத்துக்கள் பராமரிக்கின்றன.ஒரு தடச்சாலையாகும்.எதிரில் வாகனம் வந்தால்  இரு வாகனங்களும் சாலையை விட்டு விலகிச்செல்ல வேண்டும்.கிலோ மீட்டர் கற்களில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.  (பரமேஸ்வரன் டிரைவர்)
                   
   சாலையின் பாகங்களாக,,,,,
               வாகனம் செல்லும் பாதை,பக்கவாட்டிலுள்ள புயங்கள்,கேம்பர்,நடைபாதை,கெர்ப்,வேகத்தடை,தொடர்வேகத்தடை,சூப்பர் எலிவேசன்,காப்புக்கற்கள்,பிரதிபலிப்பான்கள்,காப்புச்சுவர்,வட்டச்சுற்றுப்பாதை,தீவுத்திடல்,சேனலைசர்,வழிப்படுத்தும் சேனலைசர்,தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள மீடியன்,விட்டு விட்டு கட்டப்பட்டுள்ள மீடியன்,தடுப்புச்சுவர்,மாற்றுப்பாதை,சுரங்கப்பாதை,சிறு பாலங்கள்,தரைமட்டப்பாலம்,உயர் பாலம்,தாழ்வான பாலம்,மேம்பாலம் என பலவகைகளாகப்பிரிக்கலாம். 

சாலை வரைகோடுகள்,
       போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதற்காக சாலையில் வரையப்படும் கோடுகளை மூன்று வகைகளாகப்பிரிக்கலாம்.அவை நீளவாட்டில் வரையப்படும் கோடுகள்,அகலவாட்டில் வரையப்படும் கோடுகள்,மற்ற வரைகோடுகள் ஆகும்.

 சாலையின் நடுவில் வரையப்படும் கோடுகளும்,தடங்களின் கோடுகளும் நீளவாட்டில் வரையப்படுகின்றன.

சாலையின் அகலவாட்டில் , ஜீப்ரா கிராஸிங் கோடுகள்,பாதசாரிகள் கடக்கும் கோடுகள்,வாகனங்களை நிறுத்தும் கோடுகள் வரையப்படுகின்றன.

மற்ற வரைகோடுகளாக சாலை ஓரக்கல் கோடுகள்,திசை காட்டும் கோடுகள்,தடங்களின் எண்கள், கொண்டை ஊசி திருப்பம் கோடுகள்,வேகத்தடைக்கோடுகள்,நிறுத்தி வைக்கும் கோடுகள்,பேருந்து நிறுத்தும் கோடுகள்,ஐலேண்ட்,சேனலைசர்,மீடியன்,ரவுண்டானா போன்ற வரைகோடுகள்,
 ஸ்டாப்,ஸ்லோ,கார்,சைக்கிள் போன்ற எழுத்துக்கள் என வரையப்பட்டிருக்கும்.

     இன்னும் தொடரும்......
 அன்புடன்
 C.பரமேஸ்வரன்,    
         9585600733
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

தொடரும்.......................2016 ஜனவரி 9 ந் தேதி 

Thursday, January 7, 2016

நடிகர் சோ...பத்திரிக்கையாளர் சோ...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். தனி மனிதரின் சுதந்திரத்தை எள்ளி நகையாடலாமா? இதோ சோ என்ற தனிப்பட்ட சிந்தனையுள்ள மனிதரின் செயல்பாடு பற்றி பார்ப்போம்.
..
சோவைக் குறித்து எல்லோரும் சொல்லும் ஒரு குறை அவர் ஒரு பார்ப்பனர் என்பதுவே..
அதைத்தாண்டி அவரிடம் என்ன குறை கண்டீர்கள் என்று கேள்வி கேட்டால் அதற்கு விடை எவரிடமும் இருக்காது.
அவர் ஒரு அரசியல் புரோக்கர்..சரிதான்..அதனால் அவர் அடைந்த பலன் என்ன? ஆதாயம் என்ன? பணம் சம்பாதித்துவிட்டாரா? அதிகாரத்திற்கு வந்தாரா..அல்லது தன் செல்வாக்கைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்துவிட்டாரா..
அவர் அவாளுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்..சரி அதனால் என்ன? ஒரு நாடார் இன்னொரு நநாடாருக்கும் ஒரு தேவர் இன்னொரு தேவருக்கும் ஒரு முதலியார் இன்னொரு முதலியாருக்கும் சப்போர்ட் செய்வதில்லையா.. நமக்கிருக்கும் அந்த உரிமை அவருக்கு மட்டும் அந்தணராய் பிறந்துவிட்டதாலேயே இருக்கக்கூடாதா?
சரி..அப்படியே வைத்துக்கொள்வோம்..தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ‘அவாளுக்கு’ அவர் செய்த நன்மைகள் என்ன? அவர் தனது சமூகத்திற்கு வாங்கிக்கொடுத்த சலுகைகள்தான் என்ன?
ம்..அவர் ஏன் ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்குகிறார்? ஜாதி உணர்வில்தானே..? ஓ அப்படியா..அப்படியென்றால் 1991 முதல் 1996 முடிய நடந்த ஜெயலலிதா ஆட்சியை அதிகம் எதிர்த்தவர்கள் யார்? இரண்டு பேர்தான். ஒருவர் சுப்பிரமணியம் சுவாமி..இன்னொருவர் சோ.. ஆனால் அதற்கான பலனை அனுபவித்தது கலைஞர். அதுதானே உண்மை? தமிழ்மாநிலக் காங்கிரஸை உருவாக்கி..ரஜினியை அதற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைத்து..அதிமுக ஆட்சியை விரட்டியது சோ..தானே? ஏன் அன்றைக்கு ஜெயலலிதா ஜாதி மாறியிருந்ததா? அல்லது அன்றைக்கு கலைஞர் பிராமண ஜாதிக்கு மாறியிருந்தாரா?
இன்றைக்கு நாமெல்லாரும் தூக்கிப்பிடிக்கும் காமராஜரை அன்றைக்கு உயரத் தூக்கிப்பிடித்தது..சோ..மட்டும்தான். அன்றைக்கு காங்கிரஸே காமராஜரைத் தூக்கி எறிந்துவிட்டதே.. காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு வருத்தப்பட்டது சோ மட்டும்தானே. திமுக அன்றைக்கு காமராஜரை எள்ளி நகையாடியது. தமிழர்கள் எள்ளி நகையாடினார்கள். ஆனால் இன்றைக்கு வெட்கமேயில்லாமல் காமராஜர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புகழை நாம் பாடிக்கொண்டிருக்கின்றோம்.
விடுதலைப்புலிகளைக் குறித்து எம்.ஜி.ஆர் காலத்திலேயே தீர்க்கதரிசனமாய் சொன்ன ஒரே மனிதர் சோ..மட்டும் தான். அவர்களால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு அழிவு ஏற்படும் என்று. அதன்படியே இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். மீனம்பாக்க விமான நிலையத்திலேயே வைத்து இலங்கைத் தமிழ் தலைவர்களை வேட்டையாடினர். அதன்பிறகுதான் எம்.ஜி.ஆர் விழித்துக்கொண்டார். தேவாரத்திற்கு அதிகாரம் கொடுத்து விடுதலைப்புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டி ஒடுக்கினார். பின்னர் கலைஞர் ஆட்சியில் தரைவிரித்து ஆடினர். தமிழர்களுக்கு தனி மாநிலம் கொடுத்து ஒரு உடன்படிக்கையைக் கொண்டு வந்து சிங்கள அரசை ராஜீவ்காந்தி அடிபணிய வைத்தார். ஆனால் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் அதற்கு உடன்பட மறுத்தனர். இந்தியாவிலிருந்து படை அனுப்பிவைக்கப்பட்டது.வரதராஜப் பெருமாள் முதல் இலங்கைத் தமிழக முதல்வரானார்.பதிலுக்கு ராஜீவ்காந்தியை நமது நாட்டிற்கே வந்து கொலை செய்தனர். இந்தியாவின் ஆதரவு தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் விடுதலைப்புலிகளுக்கு பறிபோனது. கடைசியில் விடுதலைப்புலிகளின் தவறான அணுகுமுறைகளினாலேயே ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினமும் அழிந்தது.
இதை 1980களிலேயே சொன்னவர் சோ ஒருவர்தான்.
திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். அதில் தவறென்ன? அவரது விமர்சனங்களுக்கு பதில் என்ன? அவர் பார்ப்பனர் என்பதா?
விடுதலைப்புலிகளை..தீவிரவாதத்தை..தமிழ்த் தீவிரவாதத்தை அவர் எதிர்க்கிறார். அதிலும் அவர் தவறென்ன?
தேசீய அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்..இந்திராகாந்திக்கு மாற்றாக ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வர உதவினார். காரணம்..இந்திராகாந்தி காமராஜரை உதாசீதனப்படுத்தினார்..அதிகார மமதை கொண்டார்..அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்ட பிறகு தான் இந்திராகாந்தி நிதானத்திற்கு வந்தார். 1996ல் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து எறியப்பட்ட பிறகுதான் அவரும் பெருமளவிற்கு நிதானத்திற்கு வந்திருக்கிறார்.
அந்தணர் என்போர் யார் என்று சோ..விடத்திலே துக்ளக் பத்திரிக்கையில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.அவர் பதில்..” மனு தர்மத்தின்படி மனிதர்களுள் 4 ஜாதிகள் உண்டு. அவர்கள்,1.சத்ரியர்கள்..(அரசர்கள்), 2.அந்தணர்கள்(அரசர்களுக்கு ஆலோசனை சொல்லுபவர்கள்),3.சூத்திரர்கள்(அரசர்களின் உத்தரவை செயல்படுத்துபவர்கள்) மற்றும் 4.வைசியர்கள்(அந்த 3 பேருக்கும் தேவையான பொருட்களைக் கண்டறிந்து கொண்டுவந்து விற்பனை செய்யும் வியாபாரிகள்). ஆனால் இன்றைக்கு யாரும் சத்ரியர்கள் அல்ல..அந்தணர்கள் அல்ல..சூத்திரர்களும் அல்ல..எல்லோரும் ஒரே ஜாதி..அது வியாபாரிகள் என்ற வைசியர்களே” இப்படி ஒரு பதிலைத் துணிகரமாய் சொல்வதற்கு ஒரு பார்ப்பானுக்கு துணிவு இருக்கிறதே..வேறு யாருக்கு அப்படி ஒரு நேர்மை இருக்கிறது?
சரி..நான் சொல்ல வந்தது அதுவல்ல செய்தி..படத்தைப் பாருங்கள்..எவ்வளவு அரசியல்வீதியாக எதிர்த்தாலும் கலைஞரால் அவரைப் புறக்கணிக்கவோ பகைக்கவோ முடியவில்லை. அதுதான் சோ..வின் பலம்.
ஒரே நேரத்தில் கலைஞரையும் தன் வீட்டிற்கு அழைக்க முடிகிறது..ஜெயலலிதாவையும் அழைக்க முடிகிறது. அததான் சோ..வின் நேர்மை.
அவர் கையில் வைத்திருக்கும் பத்திரிகையைப் பாருங்களேன்..அதுதான் சோ..வின் எளிமை. அதுதான் சூத்திரனாகிய (கலைஞர் பாஷையில்) என்னையும் சோ..வை ரசிக்க வைத்திருக்கிறது 1991ம் ஆண்டிலிருந்தே..(என்னால்எல்லாம் மற்றவர்களைப் போல் சோ இறந்து 40 அண்டுகளுக்குப் பிறகு புகழ்ந்து பாடிக் கொண்டிருக்க விருப்பம் இல்லை.அவர் உயிரோடு இருக்கும் போதே பாராட்டிவிடுகின்றேன். அதுதான் நான் கற்றதற்கு அடையாளம்..!)