Sunday, May 14, 2017

சேவை செய்யுங்க.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நாம் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.அதனால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்க.
நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.
போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை.
ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்!
எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்.
நாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப்போவதில்லை.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்து முடிவிற்கு வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டு விடும். அப்போது நீங்கள் இருந்தால்தானே உங்களைக் கேட்பதற்கு! புரிகிறதா உங்களுக்கு!!!
உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும்.
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு்உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது.
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண இயலாது.
அரண்மனையே என்றாலும் கண்ணைமூடி தூங்க எட்டுக்கு எட்டு அடி இடமே போதும். ஆகவே, ஓரளவு இருந்தால் போதுமென்று இருங்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
பணம், புகழ், அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்.
யாரும் மாற மாட்டார்கள், யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.
மனமகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. உற்சாகத்தோடு இருக்கும்போது நோய்கள் வராது. நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் உங்களை 30 அல்லது 40 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும். அதற்குமேல் என்ன வேண்டும் உங்களுக்கு?
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளமையாகவும் அனைவரும் விரும்பும்படியாகவும் வைத்துக் கொள்ள உதவுவார்கள்!!!
வரும் காலங்கள் நலமாக அமையும் என்று நம்புவோம்.
  என ஆலோசனை வழங்கிய இரா.செழியன் அவர்களுக்கு நன்றிங்க.

Sunday, May 7, 2017

இளைய சமூகம் காக்க வேண்டும்.

இன்றைய கல்விநிலை?